கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை. - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 6 April 2023

கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை.

 


கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை.


திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன அழகு என்ற நல்லியப்பன் வயது-45 விவசாயி. இவரது மனைவிக்கும், அருகே வசிக்கும் துரைப்பாண்டி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை நல்லியப்பன் கண்டித்துள்ளார். இதையடுத்து மனைவி கோபித்துக் கொண்டு தனது அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நல்லியப்பன், நத்தம் பகுதியில் உள்ள துவாரபதி தோப்புக்கு துரைப்பாண்டியை அழைத்துச் சென்று மது ஊற்றி கொடுத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் நத்தம் போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், நல்லியப்பனுக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய். பத்தாயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:

Post a Comment

Post Top Ad