போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 20 வருடம் கடுங்காவல் சிறை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 6 April 2023

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 20 வருடம் கடுங்காவல் சிறை

 


போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 20 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு.


 திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பழனி, ராமநாதன் நகரை  சேர்ந்த ராமராஜ் (59) என்பவரை போக்சோ வழக்கில் பழனி அனைத்து மகளிர்  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில்  06.04.2023 ம்தேதி வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி ராமராஜ்க்கு 20 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:

Post a Comment

Post Top Ad