பொதுமக்கள் சிறப்பு குறைதீர் முகாம் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அழைப்பு... - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 7 April 2023

பொதுமக்கள் சிறப்பு குறைதீர் முகாம் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அழைப்பு...

 



பொதுமக்கள் சிறப்பு குறைதீர் முகாம்  திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அழைப்பு.


திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தனது அறிக்கையில் தெரித்ததாவது:-



திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளர்கள், உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகங்களில் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்களிடம் நாளை 08.04.2023 ம் தேதி சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை பொதுமக்கள் தங்களின் குறைகள் குறித்த புகார்களை சிறப்பு முகாமில் தெரிவிக்கலாம் எனவும், இப்புகார்கள் குறித்து சிறப்பு விசாரணை நடத்தப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணப்பட்டு புகார்தாரர்களுக்கு தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும், நாளை நடைபெறும் சிறப்பு குறைதீர் முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று கூறியிருந்தார். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad