பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய வீரமங்கைகளுக்கு விருது வழங்கும் விழா திண்டுக்கல்லில் நடைபெற்றது.
பட்டேல் ஹாக்கிய அகடாமி மற்றும் ஜிடிஎன் கலைக்கல்லூரி இணைந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய வீரமங்கைகளுக்கு விருது வழங்கும் விழா திண்டுக்கல்லில் நடைபெற்றது. விழாவிற்கு அகடாமி பொருளாளர் பாலமுருகன் வரவேற்றார். மாவட்ட காக்கி கழகம் தலைவர்
காஜாமைதீன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பச்சதண்ணி மாணிக்கம் கலந்து கொண்டு வீர மங்கைகளுக்கு விருது வழங்கி சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி, விளையாட்டு வீரர்கள் சங்க ஆலோசகர் செல்வம், மாவட்ட விளையாட்டு வீரர்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர் சங்க தலைவர் சீனிவாசன், மாவட்ட மல்யுத்த சங்க தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவை ஆசிரியர் அரியநாயகம் தொகுத்து வழங்கினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை
பட்டேல் ஹாக்கி அகடாமி செயலாளர் ஞானகுரு, ஒருங்கிணைப்பாளர் முருகேசன், செவன் டாலர் அறக்கட்டளை தலைவர் ஹென்றி ஆகியோர் செய்திருந்தனர். நிறைவாக அறக்கட்டளை செயலாளர் மனோஜ் குமார் நன்றி கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.....
No comments:
Post a Comment