வேட்டைக்காரன் சுவாமிக்கு 50 கிடாய்கள் வெட்டி படையல் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 3 April 2023

வேட்டைக்காரன் சுவாமிக்கு 50 கிடாய்கள் வெட்டி படையல்


நத்தம் அருகே வேட்டைக்காரன் சுவாமிக்கு 50 கிடாய்கள் வெட்டி படையல்


திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடி கிராமத்தில் வேட்டைக்காரன் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் பெண் குழந்தை முதல் வயதான பெண்கள் வரை பங்கேற்க அனுமதி கிடையாது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான படையல் திருவிழா நேற்று நடந்தது. இதில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் சுவாமிக்கு பொங்கல் வைக்கப்பட்டு விழா தொடங்கியது. பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொடுத்த 50-க்கும் மேற்பட்ட  ஆடுகள் பலியிடப்பட்டு நள்ளிரவு முழுவதும் கிராமத்தார்களால்  சமைக்கப்பட்டது. பின்னர் நேற்று காலை 5.45 மணிக்கு சுவாமிக்கு படையல் செய்யப்பட்டது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து  அங்கு கூடியிருந்த 3 - ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு சில்வர் பாத்திரங்களிலும், டிபன்பாக்ஸ்களிலும் சாதமும், ஆட்டுக்கறி குழம்பும் வழங்கப்பட்டது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad