திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 203 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் பெற்றார் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 17 April 2023

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 203 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் பெற்றார்

 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  203 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் பெற்றார்



.


தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்டு வருகிறது. 

நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 203 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் பெற்றுக்கொண்டார். அந்த மனுக்களை  சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி, உடன் நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள அனைத்து கோரிக்கை மனுக்களின் மீதும் உடனடியாக தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தினார்.

இன்றைய கூட்டத்தில், திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 37 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.12.80 இலட்சம் மதிப்பிலான தொழில் கடனுதவிகள், தாட்கோ மூலம் 47 பயனாளிகளுக்கு ரூ.9.75 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகள் என மொத்தம் ரூ.22.55 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகள், வேடசந்துார் வட்டத்தைச் சேர்ந்த 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.7,200 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்கள், 5 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வே.லதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) இரா.அமர்நாத், உதவி ஆணையர்(கலால்)  சு.ஜெயசித்திரகலா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் இ.விஜயா உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad