அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்... - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 28 March 2023

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...


திண்டுக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்



திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பத்மாவதி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், வட்டார செயலாளர் சுந்தராம்பாள் , சி ஐ டி யு மாவட்ட துணைச் செயலாளர் ஜெயசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும். அங்கன்வாடி உதவியாளர்களுக்கு நிபந்தனையின்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.  மகப்பேறு விடுப்பு ஒரு வருடம் அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். மினி மையத்திலிருந்து பிரதான மையங்களுக்கு பதவி உயர்வு பெற்று சென்ற ஊழியர்களுக்கு இன்கிரிமென்ட் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad