வத்தலக்குண்டு அருகே 2 பெண்கள் உட்பட 5 கஞ்சா வியாபாரிகள் கைது... - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 28 March 2023

வத்தலக்குண்டு அருகே 2 பெண்கள் உட்பட 5 கஞ்சா வியாபாரிகள் கைது...


வத்தலக்குண்டு அருகே 2 பெண்கள் உட்பட 5 கஞ்சா வியாபாரிகள்  கைது 22 கிலோ கஞ்சா, ரூ. 3 லட்சம் பறிமுதல்


  திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஐ.ஜி. தனிப்படை சார்பு ஆய்வாளர் அழகு பாண்டி மற்றும் காவலர்கள் வத்தலகுண்டு பகுதியில் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.



 அப்போது வத்தலகுண்டு பைபாஸ் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த சித்ரா(31), கார்த்திக்(35), விஜயராஜா(26), பாண்டி செல்வி(35), சுந்தர்ராஜ்(49) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 22 கிலோ கஞ்சா, 2 டூவீலர் மற்றும் ரூ.3 லட்சம் பணம், 5 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.  இதனையடுத்து  வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் இவர்களை ஒப்படைத்தனர். இதுகுறித்து வத்தலகுண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



திண்டுக்கல்லில் கடந்த வாரம் டிஜிபி சைலேந்திர பாபு மாவட்ட காவல் துறையினரிடம் ஆய்வு கூட்டம் நடத்தினார். அப்போது திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 80 சதவீதம் கஞ்சா விற்பனை இல்லை என்றும், கஞ்சா விற்பனை இல்லா மாவட்டமாக மாறிவருவதாக தெரிவித்தார். இந்நிலையில் வத்தலகுண்டு பகுதியில் கஞ்சா வியாபாரிகள் 5 பேரை கைது செய்து 22 கிலோ பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad