உயர்நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி திண்டுக்கல்லில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்... - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 28 March 2023

உயர்நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி திண்டுக்கல்லில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்...

 


உயர்நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி திண்டுக்கல்லில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம் 




 கடந்தாண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு இன்று  தீர்ப்பு வழங்கினார். இதனை அடுத்து  அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பேட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 



இதற்கான  சான்றிதழை தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வழங்கினர். திண்டுக்கல்லில் அதிமுகவினர்  பேருந்து நிலையம் எம்ஜிஆர் சிலை அருகே பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். 


 அமைப்புச் செயலாளரும், முன்னாள் மேயருமான வரதராஜ் தலைமையில்,  திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன், ஒன்றிய செயலாளர் ராஜசேகர் உள்ளிட்ட திரளான அதிமுகவினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.


தமிழக குரல் இணையதள செய்திகள் திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad