திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வத்திபட்டியில் இருந்து லிங்கவாடி கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ளது பொன்னர் சங்கர் கோவில். இக்கோவிலில் காசம்பட்டி, வத்திபட்டி, கோமனாம்பட்டி, விளாம்பட்டி மற்றும் சாத்தாம்பாடி ஆகிய 5 கிராமங்களில் உள்ள கோவிலுக்கு பாத்தியப்பட்ட பங்காளிகள் சேர்ந்து திருவிழா கொண்டாடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதில் சில கிராமத்தை சேர்ந்தவர்களை கோவிலில் சாமி கும்பிட அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விளாம்பட்டி, கோமனாம்பட்டி மற்றும் சாத்தாம்பாடி கிராம பங்காளிகள் கோவில் முன்பாக தங்களையும் சாமி கும்பிட சேர்க்க வலியுறுத்தி கையில் பதாகைகள் ஏந்தியபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், வருவாய்த்துறையினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாலுகா அலுவலகத்திற்கு வருமாறு கூறி சென்றுவிட்டனர்.
அதை தொடர்ந்து அங்கு நடந்த கூட்டத்தில் ஏற்கனவே இது சம்பந்தமாக பேசி முடிவெடுக்க பட்டு அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கபட்டது. மேலும் இது தொடர்பாக யாரேனும் சாமி கும்பிடுவதில் இடையூறு செய்தால் காவல்நிலையத்தை அணுகலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment