நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாத குற்றவாளிகள் 3 பேர் கைது - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 23 February 2024

நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாத குற்றவாளிகள் 3 பேர் கைது


நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாத குற்றவாளிகள் 3 பேர் கைது


திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசாரால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குரும்பபட்டியைச் சேர்ந்த அசோக் குமார்,சக்திவேல், அன்புராஜ் ஆகிய 3 பேர் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தனர்.


இதையடுத்து அவர்கள் 3 பேரையும் ஆஜர்ப்படுத்த தாடிக்கொம்பு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.     


 அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சந்திர மோகன், சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் தலைமையில்,காவலர்கள் சுப்பிரமணி,உபைத்ரகுமான், ராஜகுரு ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைத்தனர். 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர். பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad