திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே போக்சோவில் வாலிபர் கைது: வடமதுரை அருகே 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 17 October 2023

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே போக்சோவில் வாலிபர் கைது: வடமதுரை அருகே 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்


 திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே போக்சோவில் வாலிபர் கைது: வடமதுரை அருகே 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார் 



திண்டுக்கல் வடமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயதான 10-ம் வகுப்பு மாணவிக்கு திடீரென உடலில் மாற்றங்கள் ஏற்பட்டது. அவரது பெற்றோர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மாணவியை சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்தபோது, மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே மாணவிக்கு குழந்தை பிறந்து சில மணிநேரத்திேலயே இறந்து விட்டது. இதுகுறித்து வடமதுரை போலீசார் மற்றும் சமூகநலத்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் வடமதுரை அருகே உள்ள கோப்பம்பட்டியை சேர்ந்த தொழிலாளி உதயராயர் (24) என்பவர், மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உதயராயரை போலீசார் கைது செய்தனர். 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad