திண்டுக்கல் நகர் பகுதிகளில் 320 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 18 April 2023

திண்டுக்கல் நகர் பகுதிகளில் 320 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

 


திண்டுக்கல் நகர் பகுதிகளில் 320 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்-மாநகராட்சி அலுவலர்கள் அதிரடி நடவடிக்கை.


திண்டுக்கல் ஆட்சியர் விசாகன் உத்தரவின்பேரில், மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி மேற்பார்வையில், மாநகர் நல அலுவலர்(பொறுப்பு) செபாஸ்டின், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, தங்கவேல், மாசு கட்டுப்பாட்டு வாரிய இளநிலை உதவி பொறியாளர் திவ்யா மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மாநகர பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் என 320 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்தினால் கடை சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை  விடுத்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad