பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்பாட்டம். - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 5 January 2023

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்பாட்டம்.


ஒட்டன்சத்திரத்தில் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கம் சார்பில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்.


திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியிட்டாளர் சங்க நிறுவனர் தேசியத் தலைவர் டாக்டர் இராஜேந்திரன் அவர்களிள் ஆணைக்கிணங்க பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசி இழிவு படுத்திய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கம் திண்டுக்கல் மாவட்டம் சார்பில் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் முன்பு மாபெரும்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷம் முழக்கமிட்டனர் .  


ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து செய்தியாளர்களுக்கும் மற்றும்சமூக ஆர்வலர்களுக்கும்  ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கிய ஒட்டன்சத்திர காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் சார்பு ஆய்வாளர்கள் காவல்துறை பத்திரிகை துறை சார்ந்த நண்பர்களுக்கும் இறுதியில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad